என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாணவி கடத்தல்"
- சிதம்பரம் பல்கலைக்கழக மாணவி கடத்தப்பட்டார்.
- புகார் மனுவில் தனது மகளை சிதம்பரம் கொத்தங்குடி தெருவை சேர்ந்த ராஜ்குமார் கடத்தியதாக தெரிவித்துள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணலூர்கோல்டன் நகரை சேர்ந்தவர் அசோக்குமார். அவரது மகள் சுவேதா (வயது 24). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகத்தில் எம்.எஸ்.சி. படித்து வருகிறார். கடந்த 7-ந் தேதி பல்கலைகழகத்துக்கு செல்வதாக சுவேதா கூறிவிட்டு சென்றார். ஆனால் மாலை நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அசோக்குமார் தனது மகளை உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிபார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். புகார் மனுவில் தனது மகளை சிதம்பரம் கொத்தங்குடி தெருவை சேர்ந்த ராஜ்குமார் கடத்தியதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து சுவேதா என்ன ஆனார்? எங்கு சென்றார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பட்டப்பகலில் சட்டக் கல்லூரி மாணவியை காரில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- போலீசார் 2 பேரை கைது செய்து மாணவியை எதற்காக காரில் கடத்தினார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் திருப்பதியில் சட்டக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் கர்னூலை சேர்ந்த 24 வயது மாணவி ஒருவர் இறுதியாண்டு படித்து வருகிறார்.
நேற்று மாலை கல்லூரி முடிந்து மாணவி தாமனேனி பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது காரில் வந்த 2 வாலிபர்கள் கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று காரில் ஏற்றிக்கொண்டு வேகமாக சென்றனர்.
பஸ் நிறுத்தத்தில் இருந்த பொதுமக்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மாணவியை கடத்திச் சென்ற கார் எண்ணுடன் திருப்பதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து சித்தூர், ரேணிகுண்டா, திருச்சானூர், காளஹஸ்தி, கடப்பா உள்ளிட்ட போலீஸ் நிலையங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து போலீஸ் நிலையங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். சாலைகளின் குறுக்கே தடுப்புகளை அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேர வாகன தணிக்கைக்கு பிறகு ராஜம்பேட்டை நோக்கி வந்த காரை மறித்த போலீசார் அதிலிருந்து சட்டக் கல்லூரி மாணவியை மீட்டனர்.
மேலும் மாணவியை கடத்திச் சென்ற வாலிபர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் மாணவியின் சித்தப்பா மகன் வினய் தனது நண்பருடன் சேர்ந்து மாணவியை கர்னூலுக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.
போலீசார் 2 பேரையும் கைது செய்து மாணவியை எதற்காக காரில் கடத்தினார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் சட்டக் கல்லூரி மாணவியை காரில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர்:
பண்ருட்டி அருகே மேல்கவரப்பட்டை சேர்ந்தவர் சுரேஷ் (22), கார் மெக்கானிக். இவர் அதே ஊரை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் பள்ளி மாணவியை காதலித்து வந்தார். மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த மே மாதம் அவரை கடத்தி சென்றார்.
இதுகுறித்து மாணவியின் தாயார் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சென்னை யில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் சென்னை சென்று மாணவியை மீட்டனர். இது தொடர்பாக பண்ருட்டி அனைத்து மகளிர் ேபாலீஸ் நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது.மகளிர் ேபாலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.
- கடலூர் அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபரால் பரபரப்பு நிலவியது.
- அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர்:
கடலூர் அருகே சுனாமி நகரை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி 12- ம் வகுப்பு படித்து முடித்து வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று மாணவி அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாலிபர் திடீரென்று மாணவியை கடத்தி சென்றார். அப்போது அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பார்த்து அவர்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வாலிபர் அஜய் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- பள்ளிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை
- போலீசார் தேடுதல் வேட்டை
ஆம்பூர்:
ஆம்பூர் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவி பாட்டி வீட்டில் தங்கி அப்பகுதியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரது பெற்றோர் சென்னையில் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவி கடந்த 30-ந் தேதி பள்ளிக்கு சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் மாணவியை தேடியும் அவர் கிடைக்காததால் அவரது பெற்றோர் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் தனது மகளை திருமண ஆசை காட்டி வாலிபர் ஒருவர் கடத்தி சென்றிருப்பதாக புகார் அளித்தார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
- கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றார்.
- போலீசார் மாணவியை தேடி செங்கல்பட்டு விரைந்து உள்ளனர்.
வடவள்ளி,
கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அவருக்கு பொற்றோர் ஆன்லையின் வகுப்பிற்காக செல்போன் வாங்கி தந்தனர். அதில் மாணவி இன்ஸ்டாகிராம் பதிவிறக்கம் செய்தார். பின்னர் இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களிடம் பேசி வந்தார்.
அப்போது செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.
இந்தநிலைய சம்பவத்தன்று காலை மாணவி அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றார். ஆனால் அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் பல இடங்களில் தேடி பார்த்தனர். மாணவி கிடைக்கவில்லை.இதையடுத்து மாணவின் பெற்றோர் தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இன்ஸ்டாகிராம் நண்பர் செங்கல்பட்டு வாலிபர் கோவை வந்ததும், பின்னர் தொண்டாமுத்தூர் வந்து மாணவிடம் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து தொண்டாமுத்தூர் போலீசார் மாணவியை தேடி செங்கல்பட்டு விரைந்து உள்ளனர். அங்கு மாணவியை மீட்டு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்